பாபநாசம்
சட்டப் பேரவை
வழுத்தூர் சரபோஜி ராஜபுரம் வாக்காளர் பட்டியல்
உங்கள் பெயர் சரி பார்க்கவும்.
வாழ்க்கை என்பது
ஒரு சிறு மெழுகுவத்தி அல்ல. அது ஒரு
அற்புதமான தீபம்.
பிரகாசமாக அதை எரிக்கச் செய்துஇ அடுத்த
தலைமுறையிடம் ஒப்படைக்கப்பட
வேண்டும்.
உங்கள் எண்ணங்கள் எப்படியோ அப்படிதான்
வாழ்க்கையும் அமையும். எனவே
சிறந்ததையே எண்ணுங்கள்.
'நிச்சயமாக
அல்லாஹ் மூமீன்களுக்கு அருள் புரிந்திருக்கிறான்.
அவன் அவர்களிலிருந்தே ஒரு ரசூலை அனுப்பி வைத்தான்.
அவர் அவனுடைய வசனங்கனள ஓதிக் காண்பிக்கிறார். இன்னும்
அவர்களைப் (பாவத்தை விட்டும்) பரிசுத்தமாக்குகிறார்.
மேலும் அவர்களுக்கு வேதத்தையும் ஞானத்தையும் கற்றுக்
கொடுக்கிறார். அவர்களோ நிச்சயமாக இதற்கு முன் பகிரங்கமான
வழிகேட்டிலேயே இருந்தனர்." (3:164)
இந்த தளத்தை நண்பர்கள் உறவினர்களுக்கு அறிமுகப்படுத்த
Click
here
பத்ரின் அரசியல்
நாற்காலிக்காக
இருகாலிகள் நாற்காலி
ஆகிறார்கள் என்று கவிக்கோ
அப்துல் ரகுமான் சொல்வார்.
பதவிக்காக் மனிதர்கள்
மிருகங்களாக மாறிவிடுகிற
இன்றைய அரசியல் அவலத்தை
அந்த வரிகள்
படம்பிடிக்கின்றன.
பத்ரு யுத்தம், நபிகள்
நாயகம் (ஸல்) அவர்களின்
அரசியல் நடவ்டிக்கைகளில்
காணப்பட்ட பிரமிப்பூட்டும்
நுட்பத்தையும்
நாகரீகத்தையும் அடையாளப்
படுத்துகிறது. பத்ரு
யுத்ததின் அரசிய்ல்
கூறுகளில் உலக அரசியலுக்கு
எழுதப்படாத பாடங்கள்
ஏராளமாக இன்றளவும்
கிடைக்கின்றன.
ஹிஜ்ரீ 2 ம் ஆண்டு (கி.பி.
624 மார்ச் 14 ம் தேதி)
ரம்லான் மாதத்தின் 17 ம்
நாள் வெள்ளிக்கிழமை
காலையில் தொடங்கி சூரியன்
சுடத் தொடங்குவதற்கு
முன்னதாகவே முடிந்து போன
அந்த யுத்தத்த்தின்
நிகழ்வுகளையும் அதன்
நாயகர்களையும் அதில்
களப்பலியானவர்களயும்
ஒவ்வொரு ஆண்டும் உலக
முஸ்லிம்கள் ரமலான் 17 ம்
நாள் அன்று நினைவு
கூறுகிறார்கள்.
இன்றும் கூட அந்தப்
பொட்டல் வெளியில் அதே
தினத்தன்று திரளாக
கூடுகிற முஸ்லிம்கள் 1428
வருடங்களுக்கு முந்தைய
அந்த நிகழ்வை உணர்வுப்
பூர்வ்மாக நினைவு கூர்ந்து
பத்ரு யுத்தத்தில் நபிகள்
நாயகத்தோடு கலந்து கொண்ட
நபிதோழர்களுக்கு நன்றி
செலுத்தி வருகிறார்கள்.
மலேஷியாவில் தேசிய
விடுமுறை விடப்படுகிறது.
ஒரு பாலை வனப்
பிரதேசத்தில் இரண்டு
பழங்குடி இனத்தவரின் மோதல்
அல்லது ஒரு சகோதர யுத்தம்
என்பதை தாண்டி வரலாற்றை
கவர்ந்திழுக்கிற
சிறப்பம்சங்கள் எதுவுற்ற
அந்த சண்டை, வரலாற்றை தலை
கீழாகப் புரட்டிப் போட்டது.
மத்தியக் கிழக்குப்
பகுதியின் அரசியலை
மட்டுமல்ல உலக அரசியலின்
போக்கிலும் அது ஒரு புதிய
திருப்பத்தை ஏற்படுத்தியது.
அத்ற்குப் பின்னால்
ஏற்பட்ட எழ்ச்சியில் அன்றை
இரு பெரும் வல்லரசுகளான
பாரசீகத்தின் சாசானியப்
பேரர்சும் ரோமின்
பைஜாந்தியப் பேரரசும்
சபதமில்லாமல் சாய்ந்தன.
அமெரிக்காவும்
ஆஸ்திரேலியாவும்
கண்டுபிடிக்கப் ப்டுவதற்கு
முன்னாள் அன்றை உலகம்
என்பது ஆசியா ஆப்ரிக்கா
ஐரோப்பா என்ற மூன்று
கண்டங்களை மட்டுமே
கொண்டிருந்தது. அன்றைய
அந்தபூமியின்
நிலப்பரப்பில் சுமார் 70
சதவீத பரப்பிற்கு இஸ்லாம்
பரவியது என்றால் அதற்கு
மூல வித்தாக அமைந்தது
பத்ரு யுத்தம்
அதனால் தான் ஆசியக்
கண்டத்தின் வரலாற்றை திசை
திருப்பிய இருபது
யுத்தங்களை வரிசைப்
படுத்துகிற
வர்லாற்றாய்வாளர்கள் பத்ரு
யுத்ததிற்கு இரண்டாவது
இடத்தை தருகிறார்கள்.
மேலும் படிக்க இங்கே
கிளிக் செய்யவும்