|
பிறப்பிற்கும்- இறப்பிற்கும்
இடைப்பட்ட மனித வாழ்க்கை அதி
அற்புதமானது. அதை சிறப்பாக
அமைத்துக்கொண்டு, இந்த உலகத்தில்
ஒவ்வொரு மனிதரும் நிம்மதியாய் வாழ
இயற்கை உருவாகி இருக்கிறது.
இந்த உலகமே ஐம்பூதங்கள் என்ற
இயற்கையால் ஆனது.
உலகின் ஆதார சக்தியான சூரியன்
நெருப்புக் கோளமானது. இதன் ஒரு
பகுதி குளிர்ந்து, சாம்பலாக
உதிர்ந்து மண்ணாக மாறி நிலமானது.
இந்த மண்ணை குலுக்கிவிட்ட போது
காற்று உருவானது. காற்று
கருமேகங்களாகி மழையானது. அந்த மழை
கீழே கொட்டியதும், செடி, கொடி,
மரம், உயிரினங்கள்... எல்லாம்
உருவானது! இதுதான் உலகம்!!
அதுபோல் நெருப்பு, மண், காற்று,
நீர் ஆகாயம் போன்ற அம்சங்களின்
உருவாக்கமே மனித உடல் என்று
இந்தியாவின் சித்த மருத்துவமும்,
சினாவின் அக்குபஞ்சர் மருத்துவமும்
உணர்த்துகின்றன.
உலகத்தின் உருவாக்கமாகிய
ஐம்பூதங்களில் முரண்பாடு
ஏற்பட்டுவிடக் கூடாது. தண்ணீர்
அதிகமானால் மண்ணை அரித்துக்கொண்டு
போய்விடும். ஆனால் தண்ணீரே இல்லா
விட்டால் பூமி வறண்டுவிடும்.
காற்று அதிகமாகிவிடும்போது மரங்கள்
சாய்ந்துவிடும். காற்றே
இல்லாவிட்டால் மரங்கள் வளராது.
நெருப்பு எரிய காற்று தேவை. ஆனால்
காற்று மிக அதிகமாக இருந்தால்,
நெருப்பால் எரிய முடியாது.
ஒன்றுக்கொன்று சமச்சீர் இல்லாமல்
போனால், இயற்கையின் இயக்கத்தில்
ஏற்றத்தாழ்வு ஏற்பட்டு அழிவு
தோன்றிவிடும்.
கொடைக்கானலுக்கு போனாலும்
கோவில்பட்டிக்கு போனாலும் ஒரே
இயற்கைதான். சில இடங்களில் செடிகள்
மட்டம் இருக்கின்றன. சில இடங்களில்
பூக்களும் கிடக்கின்றன.
மேலும் படிக்க..... |