|
நபிகளாரை ஒரு பொழுது காண நேர்ந்தால்... |
வறுமையுந் தீரும்; நோயும்விட்
டகலும்;
மனத்தினிற் கவலையும் நீங்கும்;
சிறுமையும் அகலும்; புத்தியும்
பெருகும்;
தீவினை வந்தட ராது!
தெறுபகை சிதையும்; செல்வமும்
வளரும்;
தேகமும் சிறந்து பூரிக்கும்;
உறுபவந் தொலையும்; முகம்மதை
யெவர்க்கும்
ஒருபகற் காண்கிலென் றுரைப்பார்!
-உமறுப்புலவர் சீறாப்புராணம் : 363
பொருள்:
நபி முகம்மது சல்லல்லாஹ் அலைஹிவசல்லமவர்களை யாவர்களாயினும் ஒரு பகற்பொழுது
பார்ப்பார்களேயானால், அவர்களுக்கு 'தரித்திரமும் நீங்கும்; பிணிகளும்
சரீரத்தை விட்டு ஓடும்; மனசின் கண்ணுள்ள சஞ்சலமும் தீரும்; சிறுமையும்
போகும்; அறிவும் அதிகரிக்கும்; கொடிய செயலானது வந்து நெருங்காது; தங்கிய
பகைமை கெடும்; சம்பத்தும் ஓங்கும்; சரீரமும் சிறப்புற்றுப் பூரிக்கும்;
பொருந்திய பாவமும் ஒழியும்'. என்று சொல்லுவார்கள்.
-விளக்கவுரை:
மாகாமதி - சதாவனி செய்குத் தம்பிப் பாவலர்.
உங்கள் நண்பருக்கு இந்தப் பக்கத்தை அனுப்ப...
|